புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு கடினமானால் நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைப்படி உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தல் காலதாமதத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
தேர்தல் பிற்போடப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. தேர்தலை நாளை நடத்தினாலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். தேர்தல்களை கண்டு துவண்டு விடமாட்டோம். அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வெற்றிபெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் மாபெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை விரிவுப்படுத்தி புதிய கட்டடமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளோம். கட்சியின் அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் வற்வரி அதிகரிப்பினால் மக்கள் எமது ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர் என கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் வற் வரியினை அதிகரிப்பதற்கு நாம் ஒருபோதும் விரும்பமில்லை. ஆனாலும் முன்னைய ஆட்சியின் செயற்திறனற்ற பொருளாதார கொள்கையின் காரணமாக தற்போது பல்வேறு நெருக்கடிக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. குறித்த வரி அதிகரிப்புகள் யாவும் தற்காலிக மானவையாகும். இதற்கான மாற்றுவழிகளை கையாள நாம் திட்டமிட்டுள்ளோம்.
1994 ஆம் ஆண்டு காலப்பகுதியின் மொத்த வருமானத்தில் 23 சதவீதம் வரியிலிருந்து பெறப்பட்டதாகும். ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது 10 சதவீதமே பெறப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களுக்கும் சூதாட்ட வியாபாரங்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்டு பாரிய சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்விளைவாகதான் வரி அதிகரிப்பினை செய்ய வேண்டியுள்ளது.
அதுமாத்திரமின்றி முன்னைய ஆட்சியின் போது பெறப்பட்ட பாரிய கடன்தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான தவணை முறையில் வட்டி செலுத்துவதற்காக எமது ஆட்சியில் கடன் பெறப்பட்டுள்ளன. ஆனாலும் வரி அதிகரிப்பினால் மக்கள் வாழ்க்கை நிலைமை பாதிக்கப்பட கூடும். நாம் மக்களின்
வாழ்க்கை நிலைமையை ஒழுங்குமுறைமைக்கு கொண்டுவரவே பல்வேறு வரி அதிகரிப்பினை செய்துள்ளோம்.
ஆனால் குறித்த வரி அதிகரிப்பினால் மக்களின் வாழ்க்கை நிலையை முழுமையாக பாதிப்புற செய்யவில்லை. பல்வேறு சலுகைகளை மக்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். சம்பள அதிகரிப்பனை அரச மற்றும் தனியார் துறை என இரண்டு சாராருக்கும் வழங்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தோம். இதுபோன்று பல்வேறு சலுகைகளை வழங்குவதற்க திட்டமிட்டுள்ளோம்.
எனவே எமது ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளவில்லை. முழுமையான நம்பிக்கையினை எம்மீது வைத்துள்ளனர். பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டுவரவற்கு அனைவரும் ஏதோவொரு வகையில் தியாகம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி தேர்தலை பிற்போட முனைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்துகின்றனர். தேர்தல் பிற்போடப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அத்துடன் தேர்தலை நாளை நடத்தினாலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். தேர்தல்களை கண்டு துவண்டு விடமாட்டோம். அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வெற்றிபெறுவோம். பாராளுமன்ற தேர்தலின் போது இதனையே கூறினர். ஆனாலும் நாமே பெரும்பான்மையை பெற்றோம்.
எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறைமைக்காக வேண்டியே தேர்தல் பிற்போடப்படுகின்றது. குறித்த பணிகள் நிறைவடைந்தவுடன் தேர்தல் நடாத்தப்படும். ஆனாலும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு கடினமானால் நடைமுறையிலுள்ள விகிதாசாரத்தின்படி உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும். காலதாமதத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM