கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நிலைமை ! மகனின் திருமண நிகழ்வில் காணொளி மூலம் இணைந்த குடும்பத்தினர்

Published By: Digital Desk 3

02 Apr, 2020 | 09:51 PM
image

உலகளாவிய ரீதியில் ஆட்கொல்லி நோயான கொவிட்19 அச்சுறுத்தி வருவதால் ஒரு குடும்பம் தனது மகனின் திருமண நிகழ்வில் பங்கேற்க முடிாயமல் காணொளியில் திருமண நிகழ்வை பார்வையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மகனின் திருமண நிகழ்வு அன்று  மணமகனின் பெற்றோர் காலையிலேயே தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

பின்னர் கிட்டதட்ட  8,000 மைல் தொலைவில் அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் நகரில் இடம்பெற்ற மகனின் திருமண நிகழ்வை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இருவழி வீடியோ ஸ்ட்ரீமில் பார்வையிட்டனர்.

குடும்ப உறுப்பினர்கள் மணமகன் நிலின் மேத்தா, பீனிக்ஸ் நகரிலுள்ள வருங்கால மனைவி மிரண்டா ஜென்கின்ஸை திருமணம் செய்து கொள்வதற்காக புதுடில்லியில் இருந்து புறப்பட இருந்தனர்.

ஆனால் அவர்கள் பயணிப்பதற்கு முந்தைய இரவு (24.03.2020), கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முடக்குமாறு அறிவித்திருந்தார். 

குறித்த பயணம் குறைந்தபட்சம் ஒரு வருடமாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இப்போது வெளியேற முடியவில்லை, அவர்கள் பங்கேற்க வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

"என் பெற்றோர், என் மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் நான் அதிகாலை 4 மணியளவில் எழுந்து, எங்கள் திருமண ஆடைகளை அணிந்துகொண்டு, கிட்டத்தட்ட ஒரு வீடியோ அழைப்பில் திருமணத்தில் இணைந்தோம்.  அவர்கள் எங்களை பார்த்து பேசுவதைக் காண முடிந்தது," என்று மணமகனின் சகோதரர் நலின் மேத்தா  ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த திருமணத்தை தவறவிட்ட ஒரே விருந்தினர்கள் இவர்கள் மட்டுமல்ல. இந்த விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர்.

ஆனால் உலகெங்கிலும் உள்ள கொவிட்-19 தொற்று பரவல் மற்றும் நகரங்களை முடக்குததல் குறித்த அச்சங்களால் சுமார் 20 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு திருமேணம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்துள்ளது.

இது தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் மேத்தா அவர்கள் அனைவரையும் சிறப்பு நாளில் ஒன்றாக இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறினார் - அவர் வட்ஸ்அப்பில் தனது உரையை வழங்கினார். அதில்,  "இது ஒரு குடும்பமாக நம் அனைவரையும் ஒரு நெருக்கமான குடும்ப நிகழ்வின் ஒரு பகுதியாக உணர அனுமதித்தது . இந்த நேரத்தில் நாம் வாழும் முறைக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17