(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபரும் நேற்று இரவு (01.04.2020) உயிரிழந்துள்ளதை அடுத்து அவரது சடலம் இன்று நண்பகல் முல்லேரியா பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது, குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் மகன் மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் மட்டும் சடலத்தை பார்வை இடவும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது.
கொழும்பு மருதானையை சேர்ந்த 73 வயதான, தங்க நகை வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவரே நேற்று உயிரிழந்தார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அங்கொடை தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவ்வாறு மாற்றப்பட்ட, அவர் தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
குறித்த தொற்றாளர் நீண்ட காலமாக நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை தொடர்பில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் கொரோனா தொற்றால் இறப்பவர்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த சுற்று நிருபத்தின் பிரகாரமும், பிரதேச சட்டவைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் முல்லேரியா பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM