(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஊரடங்கு சட்டம் காரணமாக வறுமையாலும் தொழிலின்மையாலும் வேறு காரணங்களாலும் அல்லல்படும் மக்களுக்கு இன மத பேதமின்றி உலர் உணவுப் பொதிகளை உதவியாக வழங்கும் செயற்பாடு மல்வானையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 800 உலர் உணவு பொதிகள் மல்வானை பகுதியில் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
மல்வானை பிரதேசத்தைச்சேந்த தனவந்தர் ஒருவரினாலே இந்த உதவி மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை இப் பிரதேசத்தில் வாழும் ஒருபகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
நாடு தற்போது எதிர்னோக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு சட்டம் கால வரையறையின்றி அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இப் பிரதேசத்தில் அதிகமான மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்தும் சுயதொழில் செய்துமே வாழ்ந்து வருகின்றனர். அதனால் இந்த மக்களின் கஷ்டத்தை போக்கவும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதில் இருந்து மல்வானை பிரதேசத்தில் இருக்கும் தனவந்தர்களாலும் நலன்புரி சங்கங்களாலும் வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM