(ஆர்.ராம்)
மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது.
குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது.
இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொலர்கள் வரையில் ஏற்றுமதிக்கான முற்கூட்டிய பதிவுகளும் கிடைக்காது போயுள்ளன என்றார்.
இதேவேளை, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 40சதவீதம் ஆடை ஏற்றுமதி காணப்படுவதோடு வர்த்தக ஏற்றுமதியில் 52சதவீதமாகவும் உள்ளது. மேலும் ஆடை ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீத பங்களிப்பினை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM