(எம்.மனோசித்ரா)
கொரோனா தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உள்ளிட்ட 11 சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 ஊடக மத்திய நிலையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வைக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் குறித்த 11 பேரும் தனிமைப்படு;த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பேருதோட்டையைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவரது சடலம் செவ்வாய்கிழமை நீர்கொழும்பில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM