(செ.தேன்மொழி)
ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் 12 நாட்களுக்குள் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2149 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு எட்டு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை , கண்டி ,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும் சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு செயற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதேவேளை இவ்வாறு கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு கம்பஹா, களுத்துறை , கண்டி, புத்தளம் ஆகிய பகுதிகளைத் தவிர ஏனையப்பகுதிகளில் காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததுடன்,பிற்பகல் 12 மணிமுதல் மீண்டும் அமுல் படுத்தப்பட்டது.
அதற்கமைய இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்த ஆறு மாவட்டங்களில் மாத்திரம் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 71 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 12 நாட்களுக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் , கார், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 2149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ் தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும். இதேவேளை பிரதான வீதிகள் மாத்திரமின்றி கிளை வீதிகளிலும் சோதனனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM