சமூகவலைத்தளங்களில் அரச ஊழியர்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வோர் கைதுசெய்யப்படுவர் - பொலிஸ்

Published By: Vishnu

01 Apr, 2020 | 04:12 PM
image

(செ.தேன்மொழி)

அரச ஊழியர்களின் செயற்பாடுகளை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தலைமையகம் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கேற்ற ஒத்துழைப்புகளை அரச ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் அரச ஊழியர்களால் விடப்படும் சிறு தவறுகளை காணொளியாக பதிவு செய்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு செயற்படும் நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன்  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இவ்வாறான  நெருக்கடியான நிலையில் பொது மக்களின் நலன் கருதி செயலாற்றி வரும் அரச ஊழியர்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்காது அவர்களை விமர்சிப்பது முறையற்ற செயற்பாடாகும். இதனால் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02