இலங்கையில், கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடலின் போது,
கொவிட்-19 வைரஸ் நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பான விடயங்களை ஜனாதிபதியும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குனரும் ஆலோசித்துள்ளனர்.
இவ் கலந்தரையாடல் குறித்து உலக சுகாதாரை அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அப் பதிவில், நான் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் கொரோனாவுக்கு எதிரான செயற்பாடு குறித்து உரையாடியுள்ளேன். இதன்போது கொரோனாவை அடுத்து இலங்கை மற்றும் அதன் பிராந்தியத்தில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாடினோம். அனைவரையும் ஒன்றிணைத்து கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமைக்காக நான் அவருக் நன்றியை தெரிவித்துள்ளேன். என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு நன்றிகளை தெரிவிக்கும் விதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதானது,
இலங்கையில் "கொவிட் 19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM