(செ.தேன்மொழி)
குருவிட்ட மற்றும் பாணந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருவிட்ட -ஆனந்தப்புர பகுதியில் 135 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரக்கடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு இலட்சத்து ஆயிரத்து 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது 68 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 38 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 51000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM