சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

01 Apr, 2020 | 11:38 AM
image

(செ.தேன்மொழி)

குருவிட்ட மற்றும் பாணந்துறை பகுதியில்  செவ்வாய்க்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருவிட்ட -ஆனந்தப்புர பகுதியில்  135 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரக்கடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு இலட்சத்து ஆயிரத்து 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது 68 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 38 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 51000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27