(எம்.மனோசித்ரா)
பாலாவி பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று செவ்வாய்க்கிழமை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய வடமேல் கடற்படை கட்டளை தலைமையகத்தினால் பாலாவி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே 2 கிராம் 310 மில்லி கிராம் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 23 வயதுடையவர் என்பதோடு, அவர் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM