(எம்.மனோசித்ரா)
நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, :
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. வங்கிக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்ட 9.5 மில்லியன் ரூபா மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபா அன்பளிப்பு என்பவற்றுடன் இன்று முற்பகல் 8.00 மணிக்கு 145 மில்லியன் ரூபா நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருந்தது.
மக்கள் வங்கியின் நிதி முகாமைத்துவ கணக்குகள் திணைக்களம் 9.5 மில்லியன் ரூபா, மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கம் 03 மில்லியன் ரூபா, பீபல்ஸ் லீசிங், லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வங்கி என்பனவற்றின் தலா 5 மில்லியன் ரூபா, தேசிய சேமிப்பு வங்கி 8 மில்லியன் ரூபா மற்றும் அக்பர் பிரதர்ஸ் பிரைவற் லிமிடட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 50 மில்லியன் ரூபாவுடன் வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354354 என்ற இலக்கத்தின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ எகொடவெலேவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM