காவத்தை விபத்தில் ஒருவர் பலி

Published By: Digital Desk 3

31 Mar, 2020 | 01:23 PM
image

(செ.தேன்மொழி)

காவத்தை பகுதியில் பஸ்- முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

காவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகம வீதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்திலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நாட்டின் சில பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊரடங்கு தளர்க்கப்பட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது எம்பிலிப்பிட்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த முச்சக்கரண்டியின் சாரதி காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காவத்தை பொலிஸார் மேலதிக வசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44