(செ.தேன்மொழி)
காவத்தை பகுதியில் பஸ்- முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
காவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகம வீதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்திலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நாட்டின் சில பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊரடங்கு தளர்க்கப்பட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது எம்பிலிப்பிட்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த முச்சக்கரண்டியின் சாரதி காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காவத்தை பொலிஸார் மேலதிக வசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM