மட்டக்களப்பு மண்டூரில், சகோதரர்கள் இருவர் பப்பாசி மரமொன்றை வெட்ட முயற்சித்தபோது ஒருவர் மீது மரம் வீழ்ந்ததில் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மண்டூர் பலாச்சோலைப் பிரதேசத்தில், கடந்த 25 ஆம் திகதி தமது வீட்டை அண்டிய பகுதியில் இருந்த 30 அடி உயரம் கொண்ட பப்பாசிப் மரம் ஒன்றை வெட்டுவதற்கு 10 வயது சிறுவனும், 13 வயதுடைய அவருடைய சகோதரனும் முயன்றுள்ளனர்.
இதன் போது 13 வயது சகோதரன் அந்த மரத்தினை கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்த முயன்ற போது மற்றைய சிறுவன் கோடரியால் மரத்தை வெட்டியுள்ளார்.
இதன் போது மரம் சரிந்து சிறுவன் மீது வீழ்ந்ததையடுத்து சிறுவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் நேற்று (29) இரவு சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM