மிருசுவிலில் எண்மர் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான
எதிரியான முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால்
பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக இரு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் மரணதண்டனை அளிக்கப்பட்ட பிரதான எதிரி பொதுமன்னிப்பில் விடுதலை
செய்யப்பட்டமை தொடர்பான செய்தியை வெளியிட்ட அரச ஊடகமொன்று,“நல்லாட்சி அரசின்
காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள், மேற்குலக நாடுகள் மற்றும் தமிழ் புலம்பெயர்
தரப்பினர் ஆகியோரை திருப்திப்படுத்தவதற்காக இராணுவ வீரர்களை இலக்கு வைத்து தாக்கல்
செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றான மிருசுவில் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ
வீரருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்துள்ளது” சுட்டியுள்ளது
.
இத்தகைய பிரதிபலிப்பானது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவமதிப்பதாக உள்ளது. ஆகவே
அவ்விடயத்தினை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று எதிர்வரும் நாட்களில்
தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பில் காணப்படுகின்ற அதிகாரத்தினை ஜனாதிபதி தவறாக
பயன்படுத்திமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல்
செய்யப்படவுள்ளது என்று சட்டத்தரணி தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.
- முகப்பு
- Local
- கோத்தாவின் பொதுமன்னிப்புக்கு எதிராக விரைவில் இரு வழக்குகள் தாக்கல் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா
கோத்தாவின் பொதுமன்னிப்புக்கு எதிராக விரைவில் இரு வழக்குகள் தாக்கல் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா
Published By: J.G.Stephan
30 Mar, 2020 | 02:10 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM