ஊரடங்கு அமுலில் உள்ள போது பொலிஸார் வழங்கிய அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 20 போத்தல் மது சாரமும் ஒரு தொகை பியரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவித்தினர்.
பொலிசார் ஊரடங்கின் போது பயன்படுத்துவதற்காக வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை இவர்கள் கடத்தியுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊரடங்கு சட்டத்தை மதிக்கின்ற மக்களை நாம் வரவேற்றகின்றோம். இவ்வாறான மக்களை மதித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு வியாபாரிகளுக்கு பொலிஸ் வழித்தட அனுமதியினை பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் நாம் வழங்கினோம்.
ஆனால் கல்முனை பிரதேசத்தில் பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் சாராயம் உட்பட கஞ்சா போதைப்பொருளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து எனது கையொப்பத்துடன் வழங்கப்பட்ட வழித்தட அனுமதி பத்திரமும் கிடைக்கப்பெற்றது.
இவ்வாறான நடவடிக்கையினால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM