மன்னாரில் இன்று (30) காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும் பொருள் கொள்வனவுக்காக மக்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
அத்துடன் மன்னார் புதிய அரச பஸ் தரிப்பிட பகுதியில் மரக்கறி வகைகள் கட்டுப்பாட்டு விலையினை விட அதி கூடிய விலைக்கே விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை மன்னார் நகரில் நிரந்தரமாக மரக்கறி வியாபரம் மேற்கொண்டு வருகின்ற மரக்கறி வியாபரிகளுக்கு ஊரடங்கு நேரத்தில் தம்புள்ளைக்குச் சென்று மரக்கறி வகைகளை பெற்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்படாமையும், மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்யாத ஏனைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் பலருக்கு மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் மரக்கரிவிலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னாரில் நிரந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி, விவசாயம், மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்களே அதிகமாக காணப்படுகின்ற நிலையில், ஊரடங்கு காரணமாக அவர்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் மற்றும் பலர் தமது நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
எனினும் இந் நிலை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரக்கறி வகைகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM