(செ.தேன்மொழி)
புத்தளம் -ஆரச்சிக்கட்டுவ, சின்னக்கறுப்பனைப் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கறுப்பனைப் பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதனை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தை எச்சரிக்கை வலையங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இடம்பெற்ற மரண கிரியை ஒன்றில் 30 க்கும் அதிகமான நபர்களை இணைத்துக் கொண்டு கிரியை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் குறித்த பிரதேச சபை உறுப்பினர்.
இவ்வாறு செயற்படக்கூடாது என்றும், தற்போதைய நிலையில் மக்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு தெளிவுப்படுத்தியுள்ள போதும், அவர் முறையற்று செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து கடற்படையினர் சந்தேக நபர் தொடர்பில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதுடன், பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன். அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM