இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' : 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டாேர் பதிவு 

Published By: J.G.Stephan

29 Mar, 2020 | 12:20 PM
image

(எம்.மனோசித்ரா)

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணையதளத்தில் சனிக்கிழமை மாலை வரை 17,457 வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர்.


 

இவர்களுள் 6773 பேர் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தும், 1892 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 1302 பேர் தெற்காசியாவிலிருந்தும், 1028 பேர் வட அமெரிக்காவிலிருந்தும் மற்றும் 6000 க்கும் மேற்பட்டவர்கள் உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் தம்மைப் பதிவு செய்துள்ளதாக வெளியுறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியன இந்த இணைய முகப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk முகவரியிலும் 

www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பிரத்தியேகமான அதிகாரிகள் குழுவொன்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட 700 கோரிக்கைகளில் பெரும்பாலானவை நாடு திரும்புவதற்கான சாத்தியப்பாடுகளுடன் தொடர்பானவையாகும். 

 

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் அபாயம் குறைவடையும் வரையிலும், மற்றும்  இலங்கையிலும் இந்த நோய் காணப்படவதன் காரணமாகவும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி அரசாங கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் உடனடியான தேவைகளை எளிதாக்குவதற்காகவும், தீர்வு காண்பதற்காகவும் அமைச்சு தனது தூதரக வலையமைப்பினூடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

 

 ஏனைய பொதுவான கோரிக்கைகளில் மாணவர்களின் நலன்புரிசார் விடயங்கள், வீசாவினை நீடித்தல், வேலையற்றவர்களுக்கான நிதியுதவியின் பற்றாக்குறை, சம்பளம் வழங்கப்படாமை, வர்த்தக நிறுவனங்களை மூடுதல் மற்றும் வருகை தந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் தொடர்பான கேள்விகள் ஆகியன உள்ளடங்கும்.

 

 பயணத்திற்கான இடையூறுகள் ஏற்பட்டதிலிருந்து, கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் விழிப்புடன் செயற்பட்டு வருவதுடன், குறிப்பாக மாணவர் சமூகத்தினால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில், விடுதிகள் திறந்த நிலையில் இருப்பதனை உறுதிசெய்தல், உணவு விநியோகம், அந்தந்த நிறுவனங்களால் பேணப்படுதல், மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்களை மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பி வைத்தல் மற்றும் சாத்தியமாயின், பல்கலைக்கழகம் , பாடசாலைக் கட்டணங்கள் நீடிக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியன சிலவாகும்.

 

இலங்கை மாணவர்கள் மற்றும் மாணவர் சமூகத்துடன் கூடிய கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமான ஈடுபாட்டைப் பேணுவதற்காகவும், அவர்களுக்கான நலன்புரி சார்ந்த விடயங்களை தொடர்ந்தும் வழங்குவதற்காகவும் தூதரகங்கள் மேலும் பணிக்கப்பட்டுள்ளன.

 

 குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலுள்ள இலங்கை ஊழியர்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்காக முடிந்தவரை நியாயமான சிகிச்சை, சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தூதரகங்கள் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படும். 

 

சம்பளம் வழங்குவது தொடர்பான தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியன இதில் உள்ளடங்கும். பரந்தளவிலான இலங்கையர்களின் மக்கள் தொகை காரணமாக, சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கும், வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக உதவிகள் தேவைப்படுபவர்களுக்கும் உதவிகளை வழங்குவதற்காக, இலங்கையர்களால் நிறுவப்பட்ட சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தூதரகங்கள் மேலும் கோரப்பட்டுள்ளன. 

 

முழு அளவிலான அடிப்படை உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக அணிதிரளுமாறு தூதரகங்கள் கோரப்பட்டுள்ளன.

 

 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெரும்பாலான நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, தற்போது குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு பொருத்தமான வீசா நீடிப்புகளை வழங்குவதற்கான வசதிகளை முன்னெடுக்குமாறு மார்ச் 18 ஆந் திகதிக்கு முன்னர் வெளிநாட்டு அரசாங்கங்களிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.



பல அரசுகள் இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளதுடன், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் மார்ச் நடுப்பகுதியிலிருந்து இந்த வசதியை இலங்கை விரிவுபடுத்தியுள்ளமையினால், பரஸ்பர ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஏனைய அரசாங்கங்களை இதில் ஈடுபடச்செய்த நிலையில், இந்த செயன்முறைக்கான வழிமுறைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு இலங்கைத் தூதரகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15