சிறுபோக நெற்செய்கையின் விதைப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பில் ஆரம்பம் !

29 Mar, 2020 | 12:37 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருட சிறுபோக நெற்செய்கையின் விவசாய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைபட்புடன் விவசாயிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது  உன்னிச்சை வலதுகை வாய்க்கால், இடது கை வாய்கால் நீர்பாசனத் திட்டம், களிக்குளம்  நீர்பாசனம் போன்ற நீர்பாசனம் ஊடாக இவ் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் உழவு வேலைகள் யாவும் நிறைவடைந்து,  தற்போது விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காண முடிந்தது.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அனுமதியைப் பெற்று தமது விவசாய வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04