மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா பருத்திச்சேனை பகுதியில் வைத்து கணவனும் மனைவியும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி முகம்மட் நஸீர் தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் இவர்கள் இருவரும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் சார்ஜன்ட் முகம்மட் சரீப் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இவர்கள் இருவரும் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க மனைவி ரூபா 10 ஆயிரம் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் கணவன் ரூபா 9 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்ட நிலையில் 300 மணித்தியாலயம் பொது ஊழிய வேலைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM