(நா.தனுஜா)
மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான நிலையம் அலரிமாளிகையில் நிறுவப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் இந்த நிலையத்துடன் தொடர்புகொண்டு தமது அத்தியாவசியத் தேவைகள் குறித்துத் தெரிவித்து அவற்றைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும்.
அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் அதிகாரிகளை 011 4354854, 011 4733600, 011 3456200, 011 3456201,011 3456202, 011 3456203, 011 3456204 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2333066, 011 4354882 என்ற தொலைநகல் இலக்கங்களில் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM