குழந்தை உட்பட எட்டுபேரை படுகொலை செய்த இராணுவ சார்ஜன்டிற்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியமை மனித உரிமை மீறல்களிற்கான நீதி குறித்த அவரது அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மிகமோசமான அநீதிகளிற்கு கூடநீதி வழங்கப்படுவதை தாங்கள் எதிர்ப்பதை பாதிக்கப்பட்ட மக்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் இதனை விட தெளிவாக கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் தெரிவிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிகப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த செய்தியை தொடர்புபட்;ட அரசாங்கங்கள் கருத்தில் எடுக்கவேண்டும் மனித உரிமை பாதுகாப்பு யுத்த குற்றங்கள் மீதான தடை குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகமோசமான குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட ஒரிரு குற்றவாளிகளிற்கும் பொது மன்னிப்பு வழங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கும்,எதிர்கால அநீதியை தடுப்பதற்கும் இலங்கையில் சர்வதேச பொறிமுறையே அவசியம் என்பது தெளிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM