கொழும்பிலிருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு லொறியில் அத்தியாவசிய பொருட்களுடன் ஜஸ் போதைப் பொருள் கஞ்சா, மற்றும் ஹேரோயின்களை கடத்திச் சென்ற மூவரை இன்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் கொழும்பில் அத்தியாவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை (26) ஏற்றப்பட்டு மட்டக்களப்பிற்கு எடுத்து வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த லொறியை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து மடக்கிப்பிடித்து சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த அத்தியாவசிய பொருட்களுடன் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருளும், 6 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சாவும், 104 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்கள் மீட்டகப்பட்டதுடன் லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்த பொலிஸார் லொறியையும் அத்தியாவசிய பொருட்களையும் கைப்பற்றினர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM