(இராஜதுரை ஹஷான்)
பூகோள ரீதியில் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படவுள்ள நிலையில் இந்த சவாலை எதிர்க் கொள்ள துரிதமாக விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் முடிந்தளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தற்போதைய உலக நடப்பின் பிரகாரம் எதிர்காலத்தில் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த சவாலை வெற்றிக் கொள்ள வேண்டும்.விவசாயத்துறை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் இருக்கும் மக்கள் முடியான அளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும்.
தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக கிருமிநாசினிகள், உரமானியங்கள் வழங்கப்படும் .
அத்துடன் பிரதேச விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் .
நாடு தழுவிய ரீதியாக பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இலங்கை வாழ் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM