ஊரடங்கு சட்டத்தை மீறிய 4217 பேர் கைது:1063 வாகனங்களும் பறிமுதல் 

Published By: Vishnu

27 Mar, 2020 | 02:56 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் 4217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 1063 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும் சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இஅவர்களிடமிருந்து 30 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள ஒரு வாரத்திற்குள்  மாத்திரம் 4217 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இஇவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் இ கார்இ முச்சக்கர வண்டி உள்ளிட்ட 1063 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13