ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்- நாட்டிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் - பிரதமர் அறிவிப்பு- வர்த்தகர்களை காப்பாற்ற புதிய திட்டம்-

27 Mar, 2020 | 10:27 AM
image

1

அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இந்த விதிமுறைகள் அமுலிற்கு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் அவுஸ்திரேலியர்களை கையாள்வதில் நாங்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு திரும்பும் அனைவரும் ஹோட்டல்களில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மாநில அரசாங்கங்கள் இதனை அமுல்படுத்தவுள்ள, பாதுகாப்பு தரப்பினரினதும் காவல்துறையினரினதும் உதவி நாடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் வீடுகளிற்குள் தங்கியிருந்ததன் மூலம் பல அவுஸ்திரேலியர்கள் பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்,வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளனர்  ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

தாஸ்மேனியாவில் வசிக்குமட் ஒருவர் மெல்பேர்ன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தால் அவர் மெல்பேர்னிலேயே தங்கியிருக்கவேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

2

அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு பிரஜையும் ஒவ்வொரு நிமிடமும் சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருந்து பணியாற்றுங்கள்,தேவையென்றால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் வணிக வளாகத்திலேயே வாகனத்தரிப்பிடத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து நிற்காதீர்கள்  சமூக தனிமைப்படுத்தல் கைசுத்தம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் பரவுதல் குறித்தே நாங்கள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளோம் விதிமுறைகளை மீறுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

3

அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை செயல்அற்ற நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் குறித்து அரசாஙகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கொரோனா வைரசின் பின்னர் மீண்டும் வர்த்தகங்கள் கடனின்றி மீள்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

வர்த்தக உரிமையாளர்கள் கடனால் பாதிக்கப்படாத நிலையை உறுதி செய்வதற்கான திட்டத்தினை அவுஸ்திரேலியா உருவாக்கி வருகின்றது

வங்கிகள், நிதி வழங்குநர்கள், சொத்து உரிமையாளர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு கடினமான நிலையை சகித்துக்கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அடுத்த ஆறு மாதங்களிற்கு வாடகைகள் குத்தகைள் போன்றன தள்ளுபடி செய்யப்படவுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கைகளை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களின் சுகாதார நோக்கங்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மீதான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடனும் இதனை முன்னெடுக்க விரும்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொருளாதார அடிப்படையிலான தாக்கங்கள் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

4

மேற்கு அவுஸ்திரேலியாவில் பெண்மணியொருவர் தனிமைப்படுத்தப்பட்டு;ளார் என  மாநிலத்தின் தனிமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

14 நாட்களின் பின்னர் அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த சூழ்நிலையில் அவர் பாதிக்கப்பட்டார் என்ற விபரத்தினை அதிகாரி வெளியிடவில்லை.

5

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு;ள்ள அச்சநிலையை இணைய வழி மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான இணைப்புகளை அழுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கின்ற போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

வந்திருக்கும் செய்தியை கவனமாக வாசியுங்கள், சரியானதாக தென்படாத எதனையும் உன்னிப்பாக அவதானியுங்கள் என சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10