யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது பிரதான சந்தைகள் மூடப்படும் - அரச அதிபர்

Published By: Vishnu

25 Mar, 2020 | 03:44 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில் வியாபாரங்களை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் வறிய குடும்பங்கள், சமுர்த்தி பெறும் குடும்பங்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டுவருவதற்கு சகல ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.அதனை வணிகர் கழகம் முன்னெடுத்து வருகின்றது.

கொழும்புக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகின்றன. அவ்வாறு பாஸ் எடுத்து பொருட்களை ஏற்ற செல்பவர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பொருட்களை ஏற்ற செல்லும் லொறிகளில் எந்த மாவட்டம் என்ன பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்த வேண்டும்.மேலும் முக்கியமாக செல்லும் வாகனங்களில் “அத்தியாவசிய தேவைகள் சேவை” என பெயரிடப்பட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கும் தற்போது தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுச் சந்தைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றோம். 

எனவே பொதுச் சந்தைகள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரை அழைத்து பேசி சில முடிவுகள் எடுத்துள்ளோம்.

மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது பொதுமக்கள் வீடுகளில் இருத்தவாறே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதற்கு கூட்டுறவு திணைக்களம்,வணிகர் கழகம் இணைந்து நடமாடும் விற்பனை சேவைகளை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஊடாக மக்கள் தேவையற்று பொது இடகளில் அதிகளவாக ஒன்று கூடுவது தவிர்க்கப்படும் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36