இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவர்கள் சிலரை அவர்களால் நோய் பரவும் என்ற அச்சத்தில் அயலவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்தியாவின் மருத்துவர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக அறைகளிலும் வீடுகளிலும் தங்கியிருந்தவர்கள் சிலரை வீடுகளின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர் என எய்ம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடில்லியின் மூன்று மருத்துவர்களும் ஹைதராபாத்தின் 15 மருத்துவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள எய்ம்ஸ் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்,மருத்துவர்களின் மனோநிலையில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்போது தங்கள் உடமைகளுடன் நடுவீதியில் நிற்கின்றனர் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களிற்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்திய சுகாதாரதுறை அமைச்சர் வேதனை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்களை வெளியேற்றுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM