ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி ஏந்தியவர்களும் தற்கொலை குண்டுதாரிகளும் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளளனர்.
இவர்களுக்கு எதிரான பதில் தாக்குதல்களை தற்போது ஆப்கானிஸ்தான் படையினர் முன்னெடுத்து வருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பழைய காபூலில் அமைந்துள்ள குறித்த பகுதியை துப்பாக்கி தாரிகள் காலை 7.45 மணியளவில் சுற்றி வளைத்து பதில் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவளை ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் நரேந்திரர் சிங் கல்சா கூறுகையில், இந்த மோதலில் மூன்று முதல் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் சுமார் 150 பொது மக்கள் வரை சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் தலிபான்கள் சம்பந்தப்படவில்லை என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Photo Credit : Aljazeera
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM