(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளுக்கமைய தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கடற்படையினரால் பூஸா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பு நிலையத்தில் 145 பேர் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில் கடந்த 16 திகதி அமைக்கப்பட்ட இந்த மருத்துவ கண்காணிப்பு நிலையத்தில் 17 தேசிய கடல்வள பாதுகாப்பு அதிகாரிகள், 21 இலங்கையர்கள் 3 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 24 பேர் செவ்வாய்கிழமை உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காலி துறைமுகப்பகுதியில் பாதுகாப்பு விடுதிகள் மூன்றில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 112 பேரும் வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய கடற்படையிரால் அமைக்கப்பட்டுள்ள பூஸா மருத்துவ கண்காணிப்பு நிலையத்திற்கு செவ்வாயன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 36 இலங்கையர்களும் 76 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு சுய தனிமைப்படுத்தலை முன்னெடுத்திருந்த தேசிய கடல்வள பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள பூஸா தொற்று நீக்கல் மத்திய நிலையத்தில் 66 இலங்கையர்களும் 79 வெளிநாட்டவர்களும் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM