ஈரானில் கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அந் நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்றைய தினம் அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமான ஈரான் தற்காலிகமாக சுமார் 85,000 கைதிகளை விடுவித்துள்ளதாக அந் நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெய்லி கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.
இந் நிலையிலேயே அவர்களது தற்காலிக விடுமுறை குறித்து பதிலளிக்கையில் ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவேவேளை ஈரானின் 2.5 மில்லியன் அரச ஊழியர்களில் 1.2 மில்லியன் பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில்புரியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, நாட்டின் அத்தியாவசிய பொது சேவைகள் தொடரும். சுகாதாரத் துறை போன்ற துறைகளில் பணியாற்றும் மக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுறுத்தியுள்ளார்.
ஈரானில் தற்போது 24,800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 1,934 பேர் அதனால் உயிரிழந்தும் உள்ளனர்.
இந் நிலையில் ஈரானில் தற்போது 41 மில்லியன் பேர் வரை கொரோனா தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது அந் நாட்டின் சனத் தொகையில் சுமார் 50 சதவீதம் ஆகும்.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM