(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மற்றும். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படும் சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சுகாதார சேவையாளர்கள் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது. ஆகவே பொறுப்புள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் செயலாளர் டெம்பிடியே சுஹதானந்த தேரர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் இலங்கையில் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்கு சுகாதார சேவையாளர்கள் கடினமாக முன்னின்று செயற்படுகின்றார்கள். இந.த வைரஸ் சுகாதார சேவையாளர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ள வேளையில் சுகாதார சேவையாளர்கள் அரச வானகங்களில் வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுப்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள்.
போக்குவரத்து நடவடிக்கைகளின் போது அதிகளவான பேர் ஒரே தடவையில் வரவழைக்காமல் தனித்து அல்லது குறைந்தபட்சமாக வாகனங்களில் இடவசதிக்கு ஏற்ப வரவழைக்கப்படுவது பாதுகாப்பான வழிமுறையாக அமையும். சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM