(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதை உறுதிசெய்வதற்காக சர்வக்கட்சி மாநாடொன்றைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முழு உலகுமே தற்போது நெருக்கடி நிலையொன்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையும் அவதானத்திற்குரிய நாடாக மாறியிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கிறது.
நாட்டில் சுகாதாரபிரிவு, பாதுகாப்புப்பிரிவு, ஊடகம் உள்ளிட்டோர் தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அதேவேளை, அவர்களது பணிக்கான கௌரவத்தையும் வெளிப்படுத்துகிறேன்.
அதேவேளை இச்சவாலுக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீள்வது எம்மனைவருக்கும் உரிய பொதுவான சமூகப்பொறுப்பாகும். இந்நிலையில் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்காக சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM