(செ.தேன்மொழி)
திருகோணமலையை அண்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை அண்டியப்பகுதியில் காணப்படும் வனப்பகுதியொன்றில் கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த கடற்படையினர் வனப்பகுதி ஒன்றிற்கருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைத்துள்ளதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த கடற்படையினர் சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 5 கோடாக்கள் (பீப்பாய்கள் ) மற்றும் மதுபான வடித்தலுக்கு பயன்படுத்தும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தோம்பூர் மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 20-21 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM