அதிக போட்டி விலையில் காணப்படுகின்ற பெற்றோலை நியாயமான விலையில் இலங்கைக்கு எம்மால் வழங்க முடியும். ஆபிரிக்காவின் முன்றாவது பெரிய பெற்றோல் வழங்குனரான சூடான்தனது நாட்டின் பெற்றோல் ஆய்வுகளினை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு அரிய சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளதாக புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான சூடான் தூதுவர் ஈ. எல். தாலிப் தெரிவித்தார்.
அண்மையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாலில் சூடான் மற்றும் வர்த்தக அமைச்சின் உத்திேயாகபூர்வ அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாலில் சூடான் தூதுவர் ஈ.எல் தாலீப் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஆபிரிக்கக் கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடும் வளம் மிக்க நாடும் சூடானாகும். இதன் தலைநகரம் கார்டூம். இது ஆபிரிக்காவின் மிகவும் நவீனமான பாதுகாப்பான தலைநகரங்களில் ஒன்று. நன்கு பயிற்சி பெற்ற எண்ணெய் தொடர்பான ஆய்வு திறன் கொண்டவர்கள் இங்கு வேலை செய்கின்றனர். அதிக போட்டி விலையில் காணப்படுகின்ற பெற்றோலினை நியாயமான விலையில் இலங்கைக்கு எம்மால் வழங்க முடியும். 1970 ஆம் ஆண்டு தெற்கு சூடான் பகுதியில் இருந்தே நாங்கள் எண்ணெய் ஆய்வினை தொடங்கினோம்.
எமது பிரதேசத்தில் எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சீன, மலேசிய பொறியாளர்கள் புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு புதிய எண்ணெய் வள வைப்புக்களை கண்டுபிடித்துள்ளனர்.
உண்மையில், பெரிய பெற்றோல் ஏரிகளை எடுத்துக்கொண்டால் சூடானே முன்னிலையில் உள்ளது என்று நாம் கண்டுபிடித்துள்ளோம். இப்போது உலகளவில் கச்சாவை எடுத்துக்கொண்டால் எம்மை விட சவூதி அரேபியாவில் மட்டுமே பெரியளவில் கச்சா வள வைப்பு உள்ளது என சுட்டிக்காட்ட வேண்டும். எங்கள் கச்சா மிகவும் சுத்தமானது. நாம் பெரும்பாலும் பெற்றோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எம்மிடம் டீசல் இல்லை.
இலங்கை அரசாங்கமோ அல்லது இலங்கையின் எந்தவொரு நிறுவனங்களுமோ சூடானின் தூய்மை பெற்றோலினை பெற்றுக்கொள்ள முடியும்.
நாங்கள் பெற்றோலினை மிகவும் நியாயமான விலையில் வழங்க தயாராக உள்ளோம். மிகவும் முக்கியமானது என்னவென்றால் சூடானில் எண்ணெய் ஆய்வுகளில் முதலீடு செய்தல், ஆய்வு தொகுதிகளை வாங்குதல், எண்ணெய் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல் மற்றும் சூடானில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு எம்மால் உதவிகளை வழங்க முடியும்.
எங்கள் நாட்டு பெறறோலிய அமைச்சின் வழமையான ஏலத்தில் உங்கள் அரசாங்கத்தையும் தனியார் துறையினரையும் பங்கேற்றுக்கொள்ளும்படி நாம் அழைக்கின்றோம். இலங்கை தனது பெறறோலியத்தினை தாமே உருவாக்குவதென்றால் சூடானுக்கு வந்து எங்கள் நாட்டு எண்ணெய் தொகுதிகளினை பெற்று பின்பு பிரித்தெடுத்து சுத்திகரித்து முழுமையாக இலங்கைக்கு அனுப்ப முடியும். இதற்கு தேவையான உதவிகளை நாம் வழங்குவோம். அத்துடன் உயர் நியாயமான விலையினை நிர்ணையிப்பதற்கும் உதவிபுரிவோம். சீனா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே தமது சொந்த நிறுவனங்களினை எமது நாட்டில் நிறுவியுள்ளன.இங்கு இவர்கள் தமது ஆய்வுகள், உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதியினை இங்கிருந்த வண்ணம் அவர்களின் நாட்டிற்கு அனுப்புகின்றனர். இவர்களுடைய விலைகளும் சர்வதேச விலைகளுக்கு ஒத்ததாகவே காணப்படுகின்றன. இவ்வருட இறுதிக்குள் எண்ணெய் விலை சாதாரண விலைக்கு திரும்பினால் சூடானும் உலகளவில் சிறந்த எண்ணை ஏற்றுமதியாளாராக திகழும்.
பல சர்வதேச எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த எண்ணெயை சூடானில் உருவாக்குகின்றனர். இவ் சர்வதேச உற்பத்தியாளர்களின் மத்தியில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான விதேஷ் லிமிடெட், முன்னிலையில் இருக்கின்றது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியப் பொதுத்துறை பெற்றோலிய நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் அதிகமாக இலாபம் ஈட்டும் நிறுவனமாகும். இந்நிறுவனம் எண்ணெயின் ஆய்வுகள் மற்றும் உற்பத்தி தொடர்புடைய நிறுவனங்களில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இயக்கத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.
எதிர்வரும் ஜுலை மாதம் சூடான் - கார்டூமில் நடைபெறவுள்ள தொழில்துறை மாநாட்டிற்கு இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கலந்துகொள்ளும் படி நாம் அழைப்பு விடுவிக்கின்றோம். அங்கு நாம் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளினை மேற்கொள்ளலாம். அத்துடன் இலங்கையோடு சலுகையுடனான வர்த்தக உடன்படிக்கைகளினை மேற்கொள்வதற்கும் நாம் ஆர்வமாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM