(நா.தனுஜா)
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக காலி துறைமுகம் முழுவதும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினரால் தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது.
நாட்டிற்குள் மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தொடர்சியாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. அதன்படி தெற்குக் கடற்படைத் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் தொற்றுநீக்க செயற்பாடுகளின் ஓரங்கமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலி துறைமுகம் முழுமையாகத் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.
இத்தொற்று நீக்கல் நடவடிக்கையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்த சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக, தெற்கு கடற்படைத்தளத்திற்குப் பொறுப்பான கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல்கேயின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM