ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலைமையில் பொது சேவைகளுக்கு பணம் தீர்ந்துவிட்டது என்று ரியோ டி ஜெனீரோவின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
பிரேசிலின் பெடரல் அரசிடமிருந்து உதவியை வேண்டுவதற்காகவே ஒரு நிதி அவசர நிலையை பிரகடனம் செய்வதாக ஆளுநர் பிரான்சிஸ்கோ டோர்நெல்லஸ் கூறியிருக்கிறார்.
ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செய்து தருவதாக வழங்கிய உறுதிமொழிகளை ரியோ நிறைவேற்றாமல் இருக்க நிதி நெருக்கடி காரணமாக அமையலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பொது சேவைகளை அளவாக வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இவை அனைத்தும் இல்லை என்றால் மொத்தமும் தகர்ந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வாரம் ரியோ ஆளுநரை சந்தித்த பிரேசில் ஜனாதிபதி மைக்கல் டெமர் அனைத்து கடமைகளையும் நிறைவேற்று வதை உறுதி செய்வதாக தெரிவித்தி ருப்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM