எல்லை நிர்ணய பணிகள் மாத்திரம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் இல்லை. அதற்கான காரணங்களை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதால் அது தொடர்பில் தற்போதைக்கு கருத்து வெளியிட நான் தயாராக இல்லை. எல்லை நிர்ணய பணிகள் தொடர்பிலான அறிக்கை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது எல்லை நிர்ணய பணிகள் முற்றுபெற்றமை
தொடர்பிலான அறிக்கை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அதிலிருந்து இரு மாதஙங்களில் தேர்தலை நடத்த முடியும என்றும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி எல்லை நிர்ணயம் தொடர்பிலான அறிக்கைகள் எமக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
எமது நாட்டின் அரசியலமைப்பு வலுவாக்கம்இநிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல் அடிப்படை கட்டமைப்புக்களை தீர்மானிப்பவர்களை உருவாக்க தேர்தல் அவசியம். அதேபோல் நாட்டை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒன்று அவசியம். உனவே எமது மக்களுக்கு அரசாங்கம் ஒன்று தேவையாயின் சகலரும் தமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும்.
அதனால் அனைவரும் கண்டிப்பாக வாக்குசீட்டில் பெயரை பதிவு செய்ய வேண்டும். கடந்த நாட்களில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாக்கு சீட்டுக்கள் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுபெற்றுள்ளன. எனவே சகலரும் தமது பெயர் விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிராம சேவகரிடத்தில் வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்க முடியாவிட்டாலும் வாக்கு சீட்டுக்கள் கிடைக்காவிட்டாலும் அது தொடர்பில் கிராம சேவகருக்கு அறிவிப்பது அவசியமாகும்.
சர்வஜன வாக்கெடுப்பை வலுப்படுத்தும் தேசமாக இலங்கையை மாற்றியமைக்க எதிர்பார்க்கின்றோம். முக்கியமானது சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவதாகும்.
அதனால் இந்த முறை வீதியில் இருப்பவர் உட்பட சகலரையும் வாக்குச்சீட்டில் உள்வாங்கியுள்ளோம். அத்துடன் கொழும்பை பொறுத்தவரையில் 60 ஆயிரம் பேர் வரையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் இவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொள்ள முடியும். இவர்களின் சொந்த வசிப்பிடம் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது.
எதிர்வரும் தேர்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பல் தளம்பல் நிலைகள் உள்ளன. தேர்தல் காலதாமதம் ஆவது தொடர்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு வழக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
அதேநேரம் எமக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைமையில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதில் 17 காரணிகள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதனால் அவற்றில் திருத்தம் மேற்கொள்வது குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளேன். அத்துடன் எல்லை நிர்ணய பணிகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளன என்பது தொடர்பில் அமைச்சிடம் எழுத்தூமூலம் வினவியிருந்த போதும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயலகமும் தேர்தல் நடத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்டதே தவிர தேர்தலை காலம் தாழத்துவதற்கு அல்ல. எனவே எல்லை நிர்ணய பணிகள் நிறைவு பெற்றாலும் இல்லாவிட்டாலும் எம்மால் தேர்தலை நடத்த முடியும். ஆனால் நீதி மன்ற வழக்கு உள்ளிட்ட விவகாரங்களினால் தேர்தலை காலம் தாழ்த்த வேண்டியுள்ளது.
அதேநேரம் தேர்தல் நடத்தாமைக்கான முக்கிய காரணங்களை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமையினால் தற்போது அது தொடர்பில கருத்து வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அரசியல் கட்சிகளும் சில திருத்தங்களை முன்வைத்துள்ளன. அது தொடர்பிலும் ஆராயந்துபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையும் தேர்தல் தாமத்திற்கான காரணியென கருத முடியும்.இதில் பல்லங்கத்துவ முறைமை தமது தொகுதி தவிர்ந்த ஏனய தொகுதியில் போட்டியிடுபவர்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.
அதேநேரம் தேர்தல் தொடர்பிலான ஊடக அறிவிப்புக்களை முதலில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டுமென 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைவாக அதனை தற்போது பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது எல்லை நிர்ணய பணிகள் முற்றுபெற்றமை தொடர்பிலான அறிக்கை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அதிலிருந்து இரு மாதஙங்களில் தேர்தலை நடத்த முடியும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி எல்லை நிர்ணயம் தொடர்பிலான அறிக்கைகள் தமக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM