கொரோனா வைரஸிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: சர்வமத தலைவர்கள் வேண்டுகோள்

Published By: J.G.Stephan

21 Mar, 2020 | 03:27 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டுள்ள மதத் தலைவர்கள், துரிதமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மீண்டு ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திம்புல் கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தெரிவித்துள்ளதாவது :

மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திம்புல் கும்புரே விமலதம்ம தேரர் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. எனவே நாம் ஒவ்வொருவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து எமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள சில சட்ட ரீதியான நடவடிக்கைகளின் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்புவோம். இதற்காகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.

எனவே சேவையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் விசேடமாக பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பிற்கு மதிப்பளித்து அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து விரைவாக மீண்டு பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வோம் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13