(செ.தேன்மொழி)
தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்று நேற்று வெள்ளிக்கிழமை நாடுதிரும்பியுள்ள 210 பக்தகர்களையும் தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று காலை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநீக்க பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
தம்பதிவ யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள பக்தர்கள் தொடர்பில் ஊடகப்பேச்சாளரிடம் நாம் வினவியபோது அவர் கூறியதாவது,
உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய வைரஸ் தொற்றைநீக்குவதற்காக 22 மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 3063 பேர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கையர்கள் 210 பேர் நேற்று வெளிளிக்கிழமை இரவு நாடு திரும்பியிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்து இவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நீக்கம் மத்தியநிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த மத்தியநிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள யாத்திரிகள் அனைவரும் இருவாரங்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM