இந்தியாவிலிருந்து வந்த யாத்திரீகர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் - இராணுவ பேச்சாளர்

21 Mar, 2020 | 03:56 PM
image

(செ.தேன்மொழி)

தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்று நேற்று வெள்ளிக்கிழமை நாடுதிரும்பியுள்ள 210 பக்தகர்களையும் தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று காலை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநீக்க  பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

தம்பதிவ யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள பக்தர்கள் தொடர்பில் ஊடகப்பேச்சாளரிடம் நாம் வினவியபோது அவர் கூறியதாவது,

உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய வைரஸ் தொற்றைநீக்குவதற்காக 22 மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 3063 பேர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கையர்கள் 210 பேர் நேற்று வெளிளிக்கிழமை இரவு நாடு திரும்பியிருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்து இவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நீக்கம் மத்தியநிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மத்தியநிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள யாத்திரிகள் அனைவரும் இருவாரங்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08