முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சமுதாய மருத்துவ நிபுணருமான வைத்திய கலாநிதி இ.கேசவன் தெரிவித்தார்.
அவர் மேலும தெரிவிக்கையில், தற்பொழுது கொரோனா நோய் பரவிவருவதால் பொதுமக்கள் முகக்கவசத்தை வாங்குவதற்கு தேடித் திரிவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவருடன் நேரடியாக 3 அடிக்குட்பட்ட தூரத்தில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுபவர்கள் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும்போது இந்நோய்க்கிருமிகள் வெளியேறுவதால் கொரோனா நோயாளி முகக்கவசம் அணிவது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கொரோனா நோயாளியை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவரை பராமரிக்கும் வைத்தியர், தாதிமார் மற்றும் சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் உமிழ்நீர் துகள்கள் மூலமாக கொரோனா பரவும். உமிழ்நீர் துகள்கள் பெரும்பாலும் நீண்டதூரம் பயணிக்காது. எனவே நோயாளியிடமிருந்து 4 அடிக்கு அப்பால் இருப்பவர்கள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் கிடையாது.
முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM