(செ.தேன்மொழி)
குருணாகலை - கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை - தம்புள்ளை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள அம்பியூலன்ஸ் வண்டி வீதியை விட்டுச்சென்று , தூண் ஒன்றில் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதியும் சாரதியின் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.
மெதகம-தெஹியத்தக்கண்டிய பகுதியைச்சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின் உதவியாளர் பொல்கொல்ல வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM