இன்றைய திகதியில் பெரும்பாலனவர்கள் கணனித்திரை, அலைபேசி திரை, செல்போன் திரை என டிஜிட்டல் திரையை பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனால் கண்களை இயல்பாக இமைப்பது குறைந்துவிட்டது.
இமைப்பது குறைந்துவிட்டதால் கண்களில் இயல்பாக நடைபெற வேண்டிய நீர் சுரப்பு குறைந்து, கண்கள் வறண்டு, கண்களின் ஆரோக்கியத்தை சீரற்றதாக்குகிறது.
நாளடைவில் பார்வை திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனை குணப்படுத்த தற்போது ACPA எனப்படும் நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.
இது குறித்து கண் மருத்துவ நிபுணரான சந்தீப் ஜெயின் தெரிவிக்கையில்,
“ வறண்ட கண் பாதிப்பு தொடக்க நிலையில் இருந்தால், அவர்களுக்கு அவர்களுடைய உடலிலுள்ள பிரத்யேக புரதத்தை அடிப்படையாகக்கொண்டு தயாராகும் ACPA எனப்படும் சொட்டு மருந்தை செலுத்தினால், அவர்களுக்கு ஏற்பட்ட வறண்ட கண் பாதிப்பை குணப்படுத்த இயலும்.
எம்முடைய கண்களிலிருந்து வெளியாகும் கண்ணீரில் இத்தகைய புரதங்கள் இருக்கிறது. மருத்துவ ரீதியாக விளக்கமளிக்க வேண்டுமென்றால், ஆன்ட்டி சிற்றலினேட்டட் புரத ஆன்ட்டிபயாட்டிக் (ACPA) என்ற புரதச்சத்து கண்ணீர் திரவத்தில் இருக்கிறது. இதனை பிரத்யேகமாக சுத்திகரித்து சொட்டு மருந்தாக பயன்படுத்தும்பொழுது, தொடக்கநிலையிலுள்ள வறண்ட கண் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணமளிக்கிறது.
அத்துடன், நாளாந்தம் டிஜிட்டல் திரையில் பார்ப்பதன் கால அவகாசத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உயரம் மற்றும் தொலைவில் வைத்து டிஜிற்றல் திரையை பார்ப்பதற்கான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் வறண்ட கண் பாதிப்பு வராமல் தடுக்க இயலும்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM