சிறுமியை துஷ்பிரயோத்திற்குட்படுத்தும் காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபருக்கு விளக்கமறியல்

Published By: J.G.Stephan

20 Mar, 2020 | 09:13 PM
image

(செ.தேன்மொழி)

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தும் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான குறித்த நபரை நேற்று வியாழக்கிழமை ஆடியம்பலம பகுதியில் வைத்து கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சமூகவலைத்தளங்களுடாக வெளிவந்திருந்த இந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துவந்ததுடன் , இரசாயனபகுப்பாய்வு மற்றும் தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதனடிப்படையிலே சிறுமியை அடையாளம் காணுவதன் ஊடா சந்தேக நபரை விரைவில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், முதலில் சிறுமியை அடையாளம் காண தீர்மானித்த பொலிஸார் , அதற்காக தமக்கு உதவுமாறு பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இந்நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை ஆடியம்பலம பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

36 வயதுடைய இவர் சிறுமியின் உறவினர் எனவும் , பல தடவைகள் இவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சட்டவைத்திய அதிகாரியிம் அனுமதித்துள்ள பொலிஸார், சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44