இந்தியா சென்றுள்ள பௌத்த யாத்திரிகளை அழைத்து வர நடவடிக்கை

20 Mar, 2020 | 06:45 PM
image

(எம்.மனோசித்ரா)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா சென்றுள்ள பௌத்த யாத்திரிகர்கள் விரைவாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


வெளியுறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன ஒருங்கிணைந்து இந்நடவடிக்களை துரிதமாக முன்னெடுத்து வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது : இம்மாதம் 18 ஆம் திகதி 700 யாத்திரிகர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக விமானங்கள் மூலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பினர். பயணச்சீட்டுக்களை வேறு திகதிகளுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை உட்பட, அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன மேற்கொண்டன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதற்கு முன்னர், கடைசி வர்த்தக விமானமானது கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவில் புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி காலை 10 மணி வரையில் புதுடெல்லியிலும் சென்னையிலும் உள்ள 17 பிரயாணக் குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 871 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஒரு சிறப்பு விமானம் மூலமாக இக்குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கைத் தூதரகங்கள் இந்த யாத்திரிகர்கள் குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றன.

இதேவேளை, புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் நாளாந்தம் இடைமாறும் பயணிகளைக் கொண்டு செல்லும் ஸ்ரீங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் இந்த யாத்திரிகர்களையும் கொண்டுவருவதற்கு சம்மதித்துள்ளது. இவ்விமானங்கள் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் தினமும் மாலை 18.30 மற்றும் 09.35 ஆகிய மணி நேரங்களில் புறப்படும். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் உள்ள இருக்கைகளுக்கு அமைவாக, எஞ்சியுள்ள யாத்திரிகர்களும் பயணிப்பதற்கான ஏற்பாடுகளை இரண்டு தூதரகங்களும் மேற்கொண்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08