(எம்.மனோசித்ரா)
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா சென்றுள்ள பௌத்த யாத்திரிகர்கள் விரைவாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன ஒருங்கிணைந்து இந்நடவடிக்களை துரிதமாக முன்னெடுத்து வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது : இம்மாதம் 18 ஆம் திகதி 700 யாத்திரிகர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக விமானங்கள் மூலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பினர். பயணச்சீட்டுக்களை வேறு திகதிகளுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை உட்பட, அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன மேற்கொண்டன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதற்கு முன்னர், கடைசி வர்த்தக விமானமானது கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவில் புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி காலை 10 மணி வரையில் புதுடெல்லியிலும் சென்னையிலும் உள்ள 17 பிரயாணக் குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 871 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் ஒரு சிறப்பு விமானம் மூலமாக இக்குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கைத் தூதரகங்கள் இந்த யாத்திரிகர்கள் குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றன.
இதேவேளை, புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் நாளாந்தம் இடைமாறும் பயணிகளைக் கொண்டு செல்லும் ஸ்ரீங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் இந்த யாத்திரிகர்களையும் கொண்டுவருவதற்கு சம்மதித்துள்ளது. இவ்விமானங்கள் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் தினமும் மாலை 18.30 மற்றும் 09.35 ஆகிய மணி நேரங்களில் புறப்படும். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் உள்ள இருக்கைகளுக்கு அமைவாக, எஞ்சியுள்ள யாத்திரிகர்களும் பயணிப்பதற்கான ஏற்பாடுகளை இரண்டு தூதரகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM