கொவிட் - 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.
தற்போது இத்தாலியில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3405 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இதுவரை 3245 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.
இத்தாலி கடந்த 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளார்கள்.
ஆனாலும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் தற்போது 245,613 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 10,048 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88,437 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM