தன்சல் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு வந்த வினை.!

Published By: Robert

20 Jun, 2016 | 05:49 PM
image

கண்டி பிலிமதலாவை பகுதியில் பொசன் தன்சல் சோதனையில் ஈடுபட்ட பொது சுகாதார கண்காணிப்பாளர் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் 8 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக யட்டிநுவர பொது வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் தன்சல் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு இருந்த இரு நபர்கள் தாக்கியுள்ளனர்.

அங்கு தன்சல் பாத்திரங்கள் கழுவுவதற்கு சிங் ஒன்றை பயன்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரியை அங்கு இருந்த இருவர் தகாத வார்த்தை பிரயோகம் செய்து தடியினால் தாக்கியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்