பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றிய கொரோனா வைரஸ் தொடர்பான வெகுஜன பிரார்த்தனை நிகழ்வானது நேற்றைய தினம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷின் ராய்பூரில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வின்போது சுமார் 10,000 முஸ்லிம்கள் வரை கலந்து கொண்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் டோட்டா மியா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த பிரார்த்தனை நிகழ்வில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என பி.பி.சி. செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் வெகுஜன கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேபோன்று பங்களாதேஷில் பாடசாலைகள் என்பவை ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் வெகுஜன கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறும் அந் நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந் நிலையில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி இடம்பெற்றுள்ள இந்த பிரார்த்தனை நிகழ்வின் மூலம் கொரோனா பரவல் வீதமானது அதிரிக்கக்கூடும் என்ற சந்தேம் தற்போது எழுந்துள்ளது.
இதுவரை பங்களாதேஷில் 18 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM