உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது 

Published By: Digital Desk 4

19 Mar, 2020 | 01:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பொத்துவில் பிரதேசத்தில் புதன்கிழமை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்கமைய பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திடமான நபரொருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அனுமதிப்பத்திரம் அற்ற உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் 30 கிராம் வெடிமருந்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் 25 வயதுடைய பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10