(எம்.மனோசித்ரா)
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பொத்துவில் பிரதேசத்தில் புதன்கிழமை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்கமைய பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திடமான நபரொருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அனுமதிப்பத்திரம் அற்ற உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் 30 கிராம் வெடிமருந்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் 25 வயதுடைய பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM